Wednesday, January 13, 2016

தமிழர் அறுவடைத் திருநாள்(பொங்கல்) வாழ்த்துகள்

தமிழர் அறுவடைத் திருநாள்(பொங்கல்) வாழ்த்துகள்
*****************************************************************************
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. –திருக்குறள்
(உழுதலான் வரும் மெய் வருத்தம் நோக்கிப் பிறதொழில்களைச் செய்து திரிந்தும், முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று உலகம்; ஆதலான் எல்லா வருத்தம் உற்றும், தலையாய தொழில் உழவே.)
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
தொழுதுண்டு பின்செல் பவர் – திருக்குறள்
(யாவரும் உண்ணும் வகை உழுதலைச்செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றாரே தமக்குரியராய் வாழ்கின்றவர்; மற்றையார் எல்லாம் பிறரைத் தொழுது அதனான் தாமும் உண்டு அவரைப் பின்பற்றிச் செல்கி்ன்றவர்.)
அறுவடைத் திருநாள் விழா தை பொங்கல் என தமிழர்களால் கொண்டாடப்படும் விழா.
முழுவதும் வேளாண்மை சார்ந்த விழாவாக சங்க காலத்தில் 28 நாட்கள் நடைபெற்ற இவ்விழா இன்று நான்கு நாட்கள் மட்டுமே கொண்டாடப்படுகிறது.
மார்கழி கடைசி நாள் - போகி திருவிழா :
*****************************************************
தமிழர்கள் தங்களின் பெரும் விழாக்களை தொடங்கும் முன் தங்களின் முன்னோர்களான தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்ட தமிழ் வேந்தர்களை (தெய்வ+வேந்தன் => தெய்வேந்திரன் => தேவேந்திரன - இந்திரன்) வணங்கியே எந்த விழாவையும் தொடங்குவர்.
மார்கழி கடைசி நாள் தெய்வ வேந்தனாகிய "போகி" என அழைக்கப்படும் இந்திரனுக்கு விழா எடுக்கும் நாள்.
வேளாண்மையின் முக்கிய ஆதாரமான மழையைக் கொடுக்கும் கடவுளாக வேந்தன் இந்நாளில் நன்றி செலுதப்படுகிறார்.
தமிழர் வேந்தனை வணங்கும் இந்நாளை குப்பை எரிக்கும் நாள் என முட்டாள் தனமான பொருளோடு திரித்தவர்கள் தமிழர்களை வீழ்த்திய திராவிட திருட்டுக் கூட்டம். இன்னும் பல குடிகளிடம் பல பகுதிகளில் இந்நாளில் பொதுவாக அணைத்து சாமிகளையும் மாலையில் வீட்டில் பூசை செய்து வணங்குகின்றனர். உண்மையில் வ

1 comment: